Friday, April 26, 2013

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள் மங்களூரில் கைது

கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் 68 பேர் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது பிடிபட்டனர்.

மங்களூரில் இதற்காக அவர்கள் தங்கி இருந்த பொது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரணை நடத்திய போதே இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட 68 தமிழ் அகதிகளும் மங்களூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்துடன் இவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலை கர்நாடக போலீசார் தமிழக போலீசாருக்கு அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment