Tuesday, April 30, 2013

அரசுக்கு எதிராக 5,000 வழக்குகளை தாக்கல் செய்யப்போறாங்களாம் கூட்டமைப்பினர்!

பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள தமிழர்களின் 6,000 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்காகச் சுவீகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து குறைந்தது 5,000 வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் நேற்று(29.04.2013) திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.

வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, காணி ஆவணங்களைத் தருமாறு உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரம்பும் வகையிலான போராட்டமாக இந்த 5,000 வழக்குகளையும் தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

மே மாதம் 2ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

2 comments :

Anonymous ,  April 30, 2013 at 3:35 PM  

It is interesting many families selling their land and fleeing to Australia 3000 km for better economic life, but people who have been living to the camp are not ready to leave their land and move 30 km away even the government give compensation. If those people given visa to Australia they will giveaway the land and run. Sumanthiran will have to withdraw all the 5000 cases.

கரன் ,  April 30, 2013 at 3:41 PM  

5000 செருப்பு சோடி எடுத்து இவங்களை நிர்வானமாக போட்டு அந்த செருப்பால் எறிந்து கொல்ல வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com