Thursday, February 21, 2013

ஈரானிய தூதுவராயலத்தின் மதப்பிரச்சார நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்- அதிகாரிகளை எச்சரிக்கிறது பொது பலசேன

கல்வி அமைச்சின் அனுமதியின்றி சமயமொன்றை பரப்பும் நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக பொதுபலசேனவின் முக்கியஸ்தரான தேரர் கலகொடத கனனசேகர தெரிவித்துள்ளதோடு ஈரானிய தூதுவராலயத்தின் இந்நடவடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரானிய தூதரகத்தின் இந்நடவடிக்கைக்கு கல்வி அமைச்சும் அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும்.

யாருடைய அதிகாரத்தினை பெற்று இந்த பிரசார நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது

தூதுவராலயத்தின் இந்த நடவடிக்கையினை நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன ஒருபோதும் செயற்படவில்லை.

பொதுபலசேனவிற்கான பணம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் தவிர்ந்த சாதாரண மக்களினாலேயே வழங்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு சதம் கூட பெறவில்லை. நன்கொடை வழங்குவதற்கு சிறந்த மனிதர்கள் எம்மிடம் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com