Thursday, February 21, 2013

திருகோணமலையில் குடியேற்றப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஜப்பான் அரசு 80 மில்லியன் உதவி

ஜப்பானிய அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் குடியேற்றப்பட்ட மக்களின் அபிவிருத்திக்காக "வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டம் - 3" என்ற திட்டம் அமுதல் படுத்தவுள்ளதாக அறிவித்துள்தோடு இதற்காக சுமார் 80 மில்லியன் ரூபா உதவி வழங்கியுள்ளது.

இத்தகவலானது ஜப்பானிய தூதரகத்தின் செய்தி அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டம் ஜப்பான் அரசார்பற்ற நிறுவன ஒத்துழைப்பு நன்கொடை திட்டத்தின் கீழ் பீஸ் வின்ட் ஜப்பான் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படவுள்ளது.

விவசாய, கால்நடை வளர்ப்பு பகுதிகளில் மீள்குடியேறிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுதல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் மூன்றாம் கட்டமே இந்த செயற்திட்டமாகும்.

இந்த நன்கொடை தொடர்பான ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தளத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நுபிஹிட்டோ ஹோபோவும் பீஸ் வின்ட் ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியும் கைச்சாத்திட்டனர்.

இந்த முழு திட்டத்தினால் திருகோணமலையில் வாழும் சுமார் 2,000 மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com