Thursday, January 17, 2013

எல்லையில் இந்திய வீரர்களை கொலையின் எதிரொலி பாகிஸ்தான் கொடி பெற்றோல் ஊற்றி எரிப்பு

இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழ் நாட்டில் பாகிஸ்தான் தேசிய கொடியை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனை போலீசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இப்போராட்டம் சத்யமூர்த்தி பவன் முன்பு இளைஞர் காங்கிரசார் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் அனுதாரா அபி, போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது பாகிஸ்தானை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டம் தொடர்பில் தலைமை தாங்கிய அனுராதா அபி, கூறும்போது:- இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தான் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

அந்த நாட்டிற்கு நமது நாடு தக்க பாடம் புகட்ட வேண்டும். பொருளாதார தடையும் விதிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment