பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அடுத்ததாக பிரதமர் பதவிக்கு ஷமல் ராஜபக்ஷதான் தகுதியானவர் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் மத்துகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
ஷமல் ராஜபக்ஷ அடுத்த பிரதமராவதில் கட்சிப் பிரமுகர்களிடையே கருத்து வேறுபாடுகள் கிடையாது. தற்போதைய பிரதமர் தனது உடல் நலக் குறைவின் காரணமாக மிகுந்த சிறமத்துடனேயே தனது கடமைகளைச் செய்கிறார்.
நான் யார் பின்னாலும் செல்பவனல்ல. சந்திரிக்காவுக்கு பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரை முதலில் சொன்னதும் நான் தான். அவர் இன்று தனது பொறுப்பைச் சிறப்பாகச் செய்கிறார்.
அது போல் ஷமல் ராஜபக்ஷ தான் அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவர் அப்பொறுப்பைச் சரியாகச் செய்வார். என்று தெரிவித்தார்.
-ஷான்-
No comments:
Post a Comment