Monday, January 21, 2013

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் பூஸாவிற்கு மாற்றம்

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட 44 பேர் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலைச்செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இதனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment