Sunday, January 6, 2013

எயிட்ஸ்சை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி கண்டு பிடிப்பு!

எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், கண்டுபிடித்துள்ளதுடன் எய்ட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளவர்கள் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் எனவும் இதனால் அவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் எனஅவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாது இவர்களை மேலும் வெவ்வேறு நோய்கள் இவர்களை தாக்காது இந்த புதிய தடுப்பூசி கட்டுப்படுத்த முடியும் எனவும் இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு சொல்கிறது.

தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் தினமும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால், குறிப்பிட்ட காலம் வரை எய்ட்ஸ் நோய் கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்தி வைக்க முடியும் எனவும், அதற்குப் பின்னர் மீண்டும் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த தடுப்பூசி ஏற்கனவே 32 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்து விட்ட நிலையில் , விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com