Saturday, January 19, 2013

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் எல்லை மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் - சம்பந்தன்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பாக கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று மலை இடம் பெற்றது.

இச் சந்திப்பில்,முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்காமல் தமிழ் மக்கள் தங்கள் இருப்பையும் நிலைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படும் போது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் சந்தித்து முடிவு எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-ஷான்-

1 comment: