Monday, January 14, 2013

அவிசாவளை தடுப்புகாவல் சிறை மூடப்பட்டுள்ளது - சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவிப்பு

அவிசாவளை தடுப்புக்காவல் சிறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவல் சிறையை நவீன வகையில் புனரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே சிறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். அவிசாவளை தடுப்புகாவல் சிறையை உடைத்துக்கொண்டு கைதிகள் 10 பேர் கடந்தவாரம் தப்பிச்சென்றதுடன் அதில் மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பித்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்தே சிறைச்சாலையை புனரமைப்பு செய்யும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment