Saturday, January 12, 2013

மியன்மார்: போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை

மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் சிறுபான்மை இனத்த வர்களான போராளிகள் மீது அரசாங்கம் ரசாயன ஆயுதங் களைப் பயன்படுத்தி தாக்கி வருவதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

“எங்கள் ராணுவம் ஒரு போதும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது இல்லை. அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. கச்சின் சுதந்திர ராணுவம் தவறாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்று நான் கருதுகிறேன்,” என்று அதிபரின் பேச்சாளர் யீ ஹடுட் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment