Tuesday, January 1, 2013

சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாடாக காலடி எடுத்து வைக்கின்றோம் புத்தாண்டு செய்தியில் மகிந்த

சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள2013ஆம் ஆண்டிற்கான புத்தாண்டுச் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இப்புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். இன்று பிறந்த இப்புத்தாண்டில் எமது தாய்நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களைக் காணும்,

இந்த இலக்குகளை அடைந்து கொள்வதில் எல்லா சமூகத்தினரும் பொது நோக்கத்துடன் ஒன்றுபடுவர் என்பது எனது நம்பிக்கையாகும். பிறந்த 2013ம் ஆண்டில் எமக்கு முன்னாலுள்ள எல்லாப் பணிகளிலும் திடவுறுதி, அர்ப்பணம் மற்றும் தைரியத்துடன் உயர்ந்த வெற்றிகளை அடைந்திட எனது நல்லாசிகள் உரித்தாகட்டும் என்றுள்ளது.

No comments:

Post a Comment