இலங்கை கடற்பரப்பில் தமிழக இந்திய மீனவர்கள் அத்துமீறில வந்து மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினையையும் இரு நாட்டு மீனவர்களும் இணைந்து பேசித் தான் தீர்க்க வேண்டும். இதில் இந்திய அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பேச்சு வார்த்தைக்கு வேண்டிய அனுசரணையை நாம் கட்டாயம் வழங்க தயாராக உள்ளோம் என இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூரகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை எல்லைக்குள்ளாக இந்திய மீனவர்கள் வந்து மீன்பிடிக்க வேண்டும் என்பது எமது விருப்பம் இல்லையென்றார்.
No comments:
Post a Comment