Tuesday, January 8, 2013

பாரிய குற்றவாளிகளுக்கு தியானப்பயிற்சி!

போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 பாரிய குற்றவாளி கைதிகளுக்கு தியாண பயிற்சி அளிக்கப்பட்டதாக போகம்பர சிறைச்சாலை சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் திஸ்ஸ ஜயசிங்க தெரிவித்தார்.

இவர்களில் பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு, குற்றாவளிகளாக கருதப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 47 கைதிகள் உட்பட கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கே இன்று முதல் விசேட தியானப் பயிற்சி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டதுடன் இந்த பயிற்சியினை அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தின் தியான நிலையத்தை சேர்ந்த தல்கஸ்வெவே சீலானந்த தேரரால் நடாத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment