Friday, January 18, 2013

கிளிநொச்சியிலிருந்தே அதிக வருமானம் கிடைத்ததாம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு!

தேசிய வீடமைப்பு அதிகார சபை கடன் மற்றும் வீட்டு வாடகையை மீண்டும் அறவிடும் முறையில் வீடமைப்பு நிர்மாண திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் அதிகூடிய வருமானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து கிடைத்துள்ளதாகு, அதிகார சபை தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு 146 கோடி ரூபா இவ்வாறு அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2012ம் ஆண்டு 196 கோடி ரூபா இவ்வாறு வருமானமாக திரட்டப்பட்டதாக, அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment