Monday, January 14, 2013

புனர்வாழ்வு முடிந்ததுமே பல்கலைக்கழகம், விரைவாக புனர்வாழ்வு பெறுவது மாணவர்களின் கையில் உள்ளது- ஹத்துருசிங்கே

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வில் இணைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் புனர்வாழ்வு செய்யப்பட்ட பின்னரே மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு கல்விக்காக அனுமதிக்கப்படுவார் என யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வியிலிருந்து,

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் புனர்வாழ்வில் தற்போது இணைக்க்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான சகல விடயங்களும் அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான புனர்வாழ்வு முடிந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, பல்கலைக்கழக கல்வியைத் தொடரவும் அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களின் புனர்வாழ்வு விடுதலை விரைவில் முடிவடைவது அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment