Friday, January 4, 2013

தொடரை வென்றது பாகிஸ்தான்!

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை எடுத்தது. நசீர் ஜாம்ஷெத் 106 ஓட்டங்களை எடுத்தார்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. தோனி ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டி டெல்லியில் ஜனவரி 6ம் திகதி நடைபெறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com