தெஹிவளை மாநகர சபை உறுப்பினர் தடுப்புக் காவலில்...
தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் மக்கள் சுகாதர பரிசோதகர் அஜன்த பொன்சேக்காவைத் தாக்கியதாகக் கூறப்படும், மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஸவித்ர ரமல் த சில்வாவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்கிசை மேலதிக நீதவான் ரசிர வெலிவத்த கட்டளையிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சென்ற 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸவித்ர ரமல் த சில்வா எதிர்பாராத விபத்தொன்றுக்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே கைதாகியுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment