Wednesday, January 16, 2013

பிள்ளைகளுக்காக பாடசாலை கேட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

தமது பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு சேர்ப்பதற்கு பாடசாலை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி பெற்றோர்கள் இரத்தினபுரி கலவான வீதியில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவான தேசிய பாடசாலை 1000 பாடசாலைகள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டமையினால் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தால் சுமார் 8 மணித்தியாலங்கள் இரத்தினபுரி கலவான வீதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment