Thursday, January 10, 2013

அசாமில் குண்டு வெடிப்பு பள்ளி சிறுவன் பரிதாபச் சாவு இருவர் காயம்

அசாம் மாநிலம் திக்போய் நகர் அருகில் உள்ள கார்ஜன் தொடக்கப் பள்ளியின் அருகே நேற் திகதி 09ஆம பிற்பகல் குண்டு வெடித்தது. இதில் ஒரு பள்ளிச் சிறுவன சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 2 குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தனர். மேலும் ஒரு மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கவுகாத்தியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்போய் நகரில்தான் முதல் முதலாக கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

அசாம் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று உள்துறை செயலாளர் ஜி.டி.திரிபாதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment