Saturday, January 19, 2013

சட்ட ஒழுங்கு சீர்குலைந்து ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. – மங்கள சமரவீர

அரசாங்கம் ஷிராணி விடயத்தில் மிக மோசமாகவே நடந்து கொண்டது. குற்றவாளி ஒருவரை விடவும் பிரதம நீதியரசர் இழிவாக நடத்தப்பட்டுள்ளார் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவே சட்ட ரீதியான பிரதம நீதியரசர் என சுட்டிக்காட்டிய அவர் இன்று சட்ட ஒழுங்கானது சீர்குலைந்துள்ளதாகவும், ஜனநாயகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
-ஷான்-

No comments:

Post a Comment