Tuesday, January 1, 2013

இரண்டு மாகாண சபைக்கான தேர்தல் ஏப்ரலில்!

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் அதிகாரங்களில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கும் சட்டமூலம் ஒன்று ஒன்பது மாகாணசபைகளிலும் நிறைவேற்றப்படவேண்டும் என்ற சட்டத்திலும் திருத்தங்களை கொண்டு வருவதற்கேற்ப அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் அவைத்தொடர்பிலான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் இந்த வருட் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment