Thursday, January 17, 2013

மேர்வினைக் கைது செய்யக் கோரி நீதிமன்றின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் -'பிரதான சந்தேக நபர் சுதந்திரமாக இருக்கின்றார்- எனவும் கோஷம்

களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள் இருவர் அடங்கலாக சந்தேக நபர்கள் இன்று மஹர நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்' 'பிரதான சந்தேக நபர் சுதந்திரமாக இருக்கின்றார்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்து ஆர்;ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment