Friday, January 4, 2013

தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டே எதிர்வரும் 15 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது நயினாதீவுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, யாழ்.போதனா வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment