Thursday, January 3, 2013

வடக்கு,கிழக்கு,மத்திய,ஊவா ,வடமத்திய மாகாணங்களில் சீரற்ற கால நிலை நிலவும்

இலங்கைக்கு அண்மையில் விட்டுவிட்டு வீசும் கிழக்கு நோக்கிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் விட்டுவிட்டுப் பெய்யும் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் இடையிடையே ஆலங்கட்டி வீழ்ச்சியும் காணப்படும் என்றும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முகில் மூடிய வானம் காணப்படும், சில இடங்களில்; இடியுடன் கூடிய தூறல் மழையின்போது மையங்கொண்ட பலமான காற்று காணப்படும்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு கரைகளுக்கு அப்பால் கடலில் விட்டுவிட்டு பெய்யும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இடையிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment