Tuesday, January 1, 2013

தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட 64 இலங்கையரின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தாய்லாந்தின் பட்டாய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் தடுப்புக்காவல் நீடிக்கிறது.இவர்கள் இனைவரும் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதற்காகவே இவர்கள் குறித்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலஸசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து முகவர்கள் ஊடாக லீம் சபாங் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே ஹோட்டலில் இருந்து இதற்கு முதலும் இவ்வாறு படகு மூலம் 100க்கும் மேற்பட்டவர்கள் தாய்லாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் சுற்றுலா விசா காணப்பட்டதாகவும் அவர்களுடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள்மீதான விசாரணையின் பின் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து குடிவரவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment