Tuesday, January 8, 2013

கண்ணா 2 லட்டு தின்ன ஆசை- மேர்வின்

“கண்ணா லட்டுத்தின ஆசையா” இலங்கையின் அமைச்சரவையில் படுகொலைகளை கண்டுபிடிக்க, பிரத்தியேக அமைச்சொன்றை ஏற்படுத்தி என் பொறுப்பில் தந்தால் குற்றவாளிகளை உடனடியாக தேடிக்கண்டுபிடித்து தீர்வு காண என்னால் முடியும் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இவருக்கும் இரட்டைத்தோணியில் கால்வைக்க ஆசைவந்துவிட்டது போல பதவி ஆசை யாரை விட்டது நாட்டின் மூதல் குடிமகனிடம் அதிகமான அமைச்சு இருக்குது போல அதைப்பார்த்துத்தான் மேர்வின் இப்படிச்சொன்னாரோ.

நாட்டில் படுகொலைகளை தேடுக்கண்டுபிடிக்க பொலிஸ் உள்ளதாம் அவர்களுக்கு நாம் உதவ வேண்டுமாம் இப்படி சொல்லுபவர் இதுரை எத்தனை கொலையை காட்டிக்கொடுத்தது என்றால் பூச்சியமாம்.

குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள் அதன் இன்னும் மொருவடிவமோ இது என தோன்றுகிறது தனது ஆசைக்கு எதிராக எந்த நாய்கள் எப்படி குரைத்தாலும் தனக்கு பிரச்சினையில்லை கொலைசெய்யும் நாய்களை கண்டுபிடிக்க பொலிஸிற்கு தான் உதவப்போவதாக கூறுகின்றார்.

இப்ப எந்தநாய் களவாய் எடுத்து சாப்பிட்டாலும், படுகொலை செய்தாவும் அது எல்லாம் அரசாங்கத்தின் மீதுதான் வருகிறது அப்படி விழுந்தாலும் இறுதியில் அது அம்பலத்திற்கு வருகிறபோது சிலர் நீரில் மூழ்கி மரணிக்கின்றனர். வாகன விபத்துகளில் உயிரிழக்கின்றனர், சிலர் சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து தப்பிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

தற்கொலைகள் நடைபெறும் போது அவற்றை அரசாங்கத்தின் மீது போடுவதில் பயனிலலை. இவற்றை கண்காணிக்க, பொலிஸார் உள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார் அப்ப ஏன் இந்த புதிய அமைச்சை உருவாக்கித்தாருங்கள் என்று கேட்டாரோ?

No comments:

Post a Comment