Monday, December 3, 2012

ஊர்காவற்றுறையில் கரையெதுங்கிய இராட்சத மீன்

ஊர்காவற்றுறை ஊறுண்டி கடற்கரையில் திமிங்கல வகையைச் சேர்ந்த இராட்ச மீன் ஒன்று இறந்த நிலையில் நேற்றிரவு கரையெதுங்கியுள்ளதாகவும் இம் மீனை பொது மக்கள் ஆர்வத்தோடு சென்று பார்வையிட்டு வருவதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 30 அடி நீளமும் 10 அகலமும் கொண்டதாக உள்ள இம்மீனின் தலையில் பாரிய இரண்டு கொம்புகள் காணப்படுவதாகவும் தலை முதல் வால் வரைபறை போன்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இதன் வால்பகுதியில் பாரிய காயம் ஒன்று உள்ளதாகவும் இதனால் இது கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com