Thursday, December 6, 2012

மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக கிணற்றில் காத்திருந்த சடலம்- விநோத சம்பவம்

மரணவிசாரணை அதிகாரியின் வருகைக்காக மரணமான குடும்பதஸ்தர் ஒருவரின் சடலம் 24 மணி நேரத்திற்கு மேல் கிணற்றுக்குள்ளேயே அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாயக் கிழமை மல்லாவியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் இரவு நேரத்தில் குடும்பத்தர் ஒருவர் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்தார். இவரது சடலத்தை மீட்பதற்கு தீடிர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வரவேண்டும். ஆனால் அவர் வரவில்லை.

இதனால் சடலம் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக கிணற்றிலேயே இருந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் மரணவிசரணை அதிகாரிக்கு பொது மக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் உடனடியாக அவர் பொது மக்களால் அழைத்து வரப்பட்டிருந்தார்.

1 comments :

Anonymous ,  December 7, 2012 at 1:16 PM  

It's really shameful how far we are beyond the advanced countries.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com