Monday, December 17, 2012

டாக்டர் மணமகனை மணவறையில் காக்கவைத்து காதலனுடன் ஓடிய டாக்டர் அம்மா.

மணமகன் மணவறையில் காத்திருக்க மணமகள் தன் காதலனுடன் ஒடிச் சென்றதால் திருமண மண்டபத்தில் சமைக்கப்பட்ட உணவுகளை பொது மக்களுக்கு வழங்கிச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த திங்கட் கிழமை யாழ்.மஞ்சவனப்பதி திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்தனர். மணமகனும் சுபமுகூர்த்தத்திற்கு வந்திருந்தார். ஆனால் மணமகளின் நெருங்கிய உறவினர்கள் யாரும் வரவில்லை.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வருகை தரவில்லை என்பதால் இதன்பின்னர் நிலைமையை உணர்ந்த மணமகன் குடும்பத்தினர் உணவுப் பொருட்களை ஏனையவர்களுக்கு வழங்கி வீடு சென்றனர்.

இதில் என்ன? வேடிக்கையென்றால் திருமண பந்தத்தில் இணைய இருந்த இருவர் வைத்தியர்கள் என்பதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com