Monday, December 17, 2012

மரம் முறிந்து வீழ்ந்து மூவர் சம்பவ இடத்தில் பலி -ஆறுவர் படுகாயம்

வீதியால் பிரயாணம் செய்தவர்கள் மேல் மரமென்று முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் மாத்தளை, ரத்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியால் சென்ற வான் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்த போது வானின் உள்ளே மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com