Thursday, December 20, 2012

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் அநுராதபுரத்தில் இடைமறித்துக் கொள்ளை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று அநுராதபுரம் ராஜாங்களைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு பயணிகள் சிலரிடமிருந்து பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பஸ் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த சிலர் பஸ் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கிவிட்டு பஸ்ஸை வேறொரிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் பயணிகளிடம் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் சாரதியும் நடத்துனரும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com