Saturday, December 22, 2012

திஸ்ஸ வாவியில் படகு விபத்தில் காணாமல் போனவர்களில் ஐவர் சடலமாக மீட்பு

கதிர்காமம் திஸ்ஸமாரகம திஸ்ஸ வாவியிலேயே இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போனவர்களில் 5 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படகு கவிழ்ந்தபோது அதில் 28 பேர் இருந்ததாகவும் 22 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறுவர் காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அந்த அறுவரில் 5 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

கதிர்காமம் திஸ்ஸமாரகம திஸ்ஸ வாவியில் படகு ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த போது அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்தவர்களில் அறுவரை காணவில்லை என்றும் 22 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

படகு கவிழ்ந்தபோது அதில் 28 பேர் இருந்ததாகவும் 22 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காப்பாற்றப்பட்ட 22 பேரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர்,சுழியோடிகள் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com