Wednesday, December 26, 2012

யாழில் கடல் கொந்தளிப்பு மூன்று தினங்களாக மழையும் பெய்கிறது.

யாழ்ப்பாணத்திலும் கடந்த மூன்று தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதோடு கடலும் கொந்தளிப்பாக உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.வடமராட்சி, வடமராட்சி கிழக்கு போன்ற கடற்பகுதிகளிலும் தீவகம் மற்றும் யாழ்.கடலின் சில பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பாக உள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் காலநிலை அவதான நிலையமும் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் உணர்வுலு பூர்வமாக கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com