Wednesday, December 12, 2012

வடபகுதி சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு கண்டனம் தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பினால் வட பகுதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.நீதமன்றத்திற்கு வழக்குகளுக்காக வருகைதந்திருந்த பலர் சட்டத்தரணிகளின் பணி பகிஸ்கரிப்பினால் இன்று ஏமாற்றதத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில் தமது போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடருமென வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் தெரிவத்தார்.

வெளிமாவட்டங்களில் இருந்து; தாம் பல சிரமங்களுக்கு மத்தியில் நீதிமன்றங்களுக்கு வந்தபோதும் நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் நீதிமன்றத்துக்கு வருகைதந்த மக்கள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com