Tuesday, December 25, 2012

குத வாயிலில் தங்கக்கடத்தல் அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று நண்பகல் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவ கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யபட்ட குறித்த நபரிடமிருந்து ரூ 20 இலட்சம்பெறுமதியான 3 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவற்றின் மொத்த நிறை 300 கிராம்களாகும்.

குத வாயிலில் மறைத்து வைத்தே இவர் தங்கத்தை கடத்த முயன்றுள்ளார்.இன்று நண்பகல் 2 மணிக்கு சென்னைக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார் விமானத்தில் பயணிக்க வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மைக்காலமாக குதவாயிலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com