Friday, December 28, 2012

சிறைக்கைதிகளை மன்னார் ஆயர், உள்ளிட்ட குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன, மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், வணக்கத்துக்குரிய தம்பர அமில தேரர் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

கைதிகளின் உறவினர்கள் பண்டிகை காலத்தில் அவர்களை சென்று சந்திக்கமுடியாத காரணத்தினால், தாம் அவர்களை சந்திக்க தீர்மானித்ததாக ஜெயலத் ஜெயவர்;த்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment