Tuesday, December 4, 2012

ஒரு மணி நேர பணி இடைநிறுத்தத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இளைஞர் அணி கோரிக்கை

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், இன்று நடைபெறும் சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று இலஙகை தமிழரசுக் கட்சி இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது.

இது தொடர்பில் இளைஞர் அணி விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இக் கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.

இன்ற பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில் வடக்கு- கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களும் தமது பணிகளைத் தத்தம் இடங்களிலேயே இடைநிறுத்தி இன்றைய சாத்வீகப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இளைஞர் அணி கேட்டுக்கொள்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com