Tuesday, December 4, 2012

பூநகரி விக்னேஷ்வரன் மகா வித்தியாலயத்திற்கு கணனிகள் வழங்கிய படையினர்.

முன்னொரு காலத்தில் பூநகரி தொடர்பான செய்திகள் இணையங்களில் வருவதாயின் அது இலக்கங்களில் வரும். அதாவது எத்தனை பேர் இறந்தார்கள் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் என்பது அந்த செய்திகள். ஆனால் இன்று விடயங்கள் மாற்றம் கண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பூநகரி விக்னேஷ்வரன் மகா வித்தியாலயத்திற்கு கிளிநொச்சி படைத்தலைமையகத்தினால் கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் குறிப்பிட்டளவு கணனிகளை இப்பாடசாலைக்கு வழங்கி வைத்த படையினர் அக்கணனிகள் மாணவர்களின் பாவனைக்கு போதுமானதாக இல்லை என பாடசாலை நிர்வாத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுதலை அடுத்து கடந்த 29 ம் திகதி மேலும் ஒரு தொகை கணனிகளை வழங்கியுள்ளனர்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் வன்னி மக்களுக்கு உதவுகின்றோம் என 1000 க்கு மேற்பட்ட அமைப்புக்கள் புலம்பெயர் தேசம் எங்கும் வசூலிப்புக்களை நடாத்துகின்றது. ஆனால் இவ்வாறு பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான தேவைகள் எதுவும் இவர்களால் நிறைவேற்றப்பட்டதாக இல்லை.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com