Friday, December 7, 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழவிலிருந்து எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீடிர் விலகல்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வர் திடீரென்று விலகிச் சென்றுள்ளனர். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் ஆகியோரே நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகிச் சென்றவர்களாவார்கள்.

இந்நிலையில், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.

ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடியது. இதன்போது ; பிரதம நீதியரசர் சமூகமளிக்கவில்லை. இன்றைய தினம் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் தோன்றப் போவதில்லை என அவர் நேற்றைய தினமே அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com