Wednesday, December 26, 2012

இளைஞன் வைத்தியசாலைக்குச் சென்றதும் யுவதியாகிய கதை தெரியுமோ...

(கலைமகன் பைரூஸ்) நஞ்சருந்தி ஹலாவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட, திருமணஞ் செய்த இளைஞன் என்று கூறிய ஒருவர் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றதும் (24) யுவதியாகியதால் ஹலாவத்தை பெரியாஸ்பத்திரி அதிகாரிகள் பெரும் சங்கடத்திற்குள்ளாகியுள்ளனர்.

தனது சட்டபூர்வமான கணவர் நஞ்சருந்தியதால் இளம் யுவதி பதறியடித்துக் கொண்டு இளம் கணவனை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். வைத்தியர்கள் இளைஞனை உடனே அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்குட்கு அனுப்பியதுடன் சிறுநீர் வெளியேறாததனால் சிற்றுதவியாளர் ஒருவர் அவருக்கு சிறுநீர்க் குழாய் பொருத்த முனைந்தபோது நோயாளி ஆண் அல்ல பெண் என்ற உண்மை தெளிவாகியுள்ளது.

பின்னர், நோயாளியை அழைத்துவந்த யுவதி, இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருணம் செய்து கொண்டதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடயம் பற்றித் தெரிந்துகொண்டதும் குழப்பத்திற்குள்ளாகி நஞ்சருந்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நோயாளி கூந்தலை மிகவும் கத்திரித்து சரியான ஓர் ஆணைப்போல முகமூடி தரித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் பதுவத்தை எனும் பிரதேசத்தில் வசித்துவந்தவர்களாவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com