Monday, December 3, 2012

பல்கலைக்கழக புதிய கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளி மாத இறுதியில் வெளியிடப்படும்?

பல்கலைக்கழக அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை தெரிவுசெய்வதற்கான வெட்புள்ளி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

பல்வேறு கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு பரீட்சை பெறுபேறுகளை டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகி பத்து நாட்களிற்குள் வெட்புள்ளிகளை வெளியிட முடியும்.

எவ்வாறாயினும் இந்த மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்புள்ளிகள் வெளியிடப்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர் அனுமதி அடுத்த வருட மார்ச் நடுப்பகுதியில் இடம்பெறும் என உயர் கல்வி அமைச்சர் ஏற்கவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com