Wednesday, December 19, 2012

இராணுவச் சிப்பாய்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படும் தமிழ் பெண்கள்- கருணாநிதி

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் பெண்களை வலுக்கட்டாயப்படுத்தும் இலங்கை அரசின் இச் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்;.

இந்திய ஊடகம் ஒன்றிற்றே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்த ஊடகம் கருணாநிதியின் கருத்தாக வெளியிட்டுள்ளதாவது,

அண்மையில், மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கமான 'யாழ்' என்று கூறினாலே சிங்களவர்கள் கோபப்படுகின்றனர். யாழ்ப்பாணம் உலக தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் தாக்கப்பட்டனர். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது எனவும் அவர் நினைவூட்டினார்.

இவ்வாறான நிகழ்வுகளை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார் என்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com