Thursday, December 6, 2012

'முடிந்தால் பிடியுங்கள்' பொலிஸாருக்கே சாவால் விட்ட கஞ்சா வியாபாரி

தனியார் வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றிய நபரொருவர், தான் பிரதான கஞ்சா வியாபாரி என்று தன்னை முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று பொலிஸாருக்கு சாவால் விட்டுள்ளார்.இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இதன் போது இரத்தினபுரியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட இவர் தான் கஞ்சா வியாபாரி என்றும் தன்னை முடிந்தால் கைது செய்யுமாறு பொலிஸாருக்கே சவால் விட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதுன் குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிக்கு அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இதுவே இவர் வானொலி நிகழ்ச்சி மூலம் சாவால் விடக்காரணமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com