Friday, December 7, 2012

யாழ்.கோண்டாவிலில் இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

யாழ். கோண்டாவில் பகுதியில் குடும்பத்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் துரத்தி துரத்த வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இந்து மகா வித்தியாலயம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபரை இனந்தெரியாத சிலர் துரத்தித் துரத்தி வெட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உருக்குலைந்த நிலையிலான சடலம் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் கோப்பாய் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உடம்பு முழுவதும் வெட்டுக்காயங்களுடன் காணப்படும் குறித்த சடலம், 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக இருக்கலாம் எனவும் வைத்தியசாலையின் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

1 comments :

Anonymous ,  December 7, 2012 at 1:24 PM  

It's really big surprise why the brutal crime level is increasing in northern area.Law,order and peace are they still there..? or declining in a high speed.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com