Thursday, December 20, 2012

பன்றிக்கு வைக்க கொண்டு சென்ற வெங்காய வெடி குடும்பத்தரின் உயிரைப் பறித்தது

பன்றிக்கு வைப்பதற்காக கொண்டு சென்ற வெங்காய வெடி தவறுதலாக வெடித்ததில் குடும்பத்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று வரணி இடைக்குறிச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஏழு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி காந்தராசா வயது 45 என்றவரே உயிரிழந்தவராவார்.

குறித்த குடும்பத்தர் தனது வீட்டிலிருந்து வெடி பொருட்களை செய்து எடுத்துக் கொண்டு சென்றபோது மாசேரியில் என்ற இடத்தில் வெடித்ததில் இவரது வயிற்றுப் பகுதி வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com