Friday, December 7, 2012

கொலன்னாவையில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மரணமான பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர்

பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கொலன்னாவ நகரசபையில் இடம்பெற்றுள்ளது. இதில் கொலன்னாவ எதிர்க்கட்சித் தலைவர் சந்திரசிறி டயஸ்சே சபையில் மயங்கி விழுந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாநகர சபையில் அமர்வின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமான இவருக்கு இறக்கும்போது இவருக்கு வயது 67 என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com