Wednesday, December 5, 2012

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்படும்- ஹத்துருசிங்கே

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இருந்த மிகவிரைவாக இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார். யாழ்.பலாலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசியல் வாதிகள் மற்றும் ஏனையோர் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்று செல்லவேண்டும்.

பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் மற்றும் பொலிஸார் தேவை கருதி நுழைய வேண்டி இருந்ததே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல.

அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவ பீட மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் விரும்பத்தகாத செயல்களை செய்த காரணத்தினால், இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மாணவர்களை கைது செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதியே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். என்றார்

இக்கலந்துரையாடலில், யாழ். பல்கலைக்கழக உப- துணைவேந்தர் வேல்நம்பி, உட்பட் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவபீட பீடாதிபதி, இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com