Monday, December 10, 2012

அரசியல் தீர்விற்காக ஒன்பது கட்சிகள் கூட்டாக இணைந்து த.தே.கூ பேச தீர்மானம்

அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் கூட்டாக இணைந்து பேசுவதற்கு தீர்மானித்துள்ளன.

அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக இந்த ஒன்பது கட்சிகளும் ஒரு முன்னணியாக செயற்படவுள்ளன.

சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்னியூஷ்ட் கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமஷமாஜ கட்சி மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றன.

இந்த கட்சிகளின் ஆதரவுக்கு மேலதிகமாக ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் டிலான் பெரேரா, ரெஜினோல் குரே மற்றும் அதாவுட செனவிரத்ன ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com