Tuesday, December 25, 2012

வெளி தொடர்புகள் துண்டிக்கப்பட்ட மன்னார்!

மல்வத்துஓயா நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுத்துள்ளதால் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு போகும் மன்னார் - வவுனியா, மன்னார் - மதவாச்சி போக்குவரத்துக்களுடன் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

மன்னாரிலிருந்து மதவாச்சி மற்றும் வவுனியா நோக்கிச் சென்ற பஸ்கள் தம்பனைக்குளம் பிரதான சந்தியிலும் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி வந்த பஸ்கள் மடுச்சந்தியிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாககுறிப்பிட்டதுடன் தம்பனைக்குளம் கிராமம் முற்றாக வெள்ளத்தில், மூழ்கியுள்ளதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த 350 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் கூறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com